Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம்: மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா மற்றும் திருநெல்வேலி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் அறிவுரையின் படி தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் காவல் உதவியாளர் ஜெயக்குமார் தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அனைத்து தறப்பு மக்களுக்கும் அரசு வழங்கும் பொது விநியோக பொருட்கள் சரியாக கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் ரேஷன் பொருட்கள் கிடைக்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய வழிமுறைகளை கூறினர்.
மேலும் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள் பெறுவதற்கு ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா என்பதை கேட்டு அறிந்தனர்.